Published : 28 Aug 2019 01:28 PM
Last Updated : 28 Aug 2019 01:28 PM

ரயிலில் திருடுபோன 257 பவுன், 336 செல்போன்கள், ரூ.2.58 லட்சம்: உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

சென்னை

ரயிலில் திருடு போன பொருட்களை உரியவர்களிடம் காவல்துறை ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதில் சென்னை மற்றும் திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையங்களில் 2018-19 ஆம் ஆண்டில் பல்வேறு வழக்குகளில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டன.

சேலம், ஈரோடு ரயிலில் கொள்ளையடித்த மகாராஷ்டிரா சாமிலி கொள்ளக்காரர்கள் மற்றும் பிரபல ரயில் திருடன் சாகுல் ஹமீது, இந்தியா முழுவதும் கொள்ளையடித்த திருடன் சுபாங்கர் சக்கவர்த்தி மற்றும் பிஹார் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டன. குறிப்பாக 257 பவுன் தங்க நகைகள், 336 செல்போன்கள், 1 லேப்டாப், ரொக்கப் பணம் ரூ.2.58 லட்சம் ஆகியவை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதேபோல சொத்துகளை மீட்ட தனிப்படையினருக்கு சைலேந்திர பாபு, பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்வு ரயில்வே துறை டிஜிபி சைலேந்திர பாபு முன்னிலையில் சென்னை, எழும்பூரில் நடைபெற்றது. இதில் ரயில்வே ஐஜிபி வனிதா ஐபிஎஸ், மகேந்திரன் ஐபிஎஸ், சந்தோஷ் சந்திரன் ஐஆர்எஸ், சரோஜ் குமார் தாக்கூர் ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளும் ஏராளமான காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x