Published : 23 Aug 2019 09:39 AM
Last Updated : 23 Aug 2019 09:39 AM

19 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், திருநெல்வேலி, கன்னியா குமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம், தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் ஆகிய இடங்களில் தலா 10 செமீ, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 8 செமீ, கடலூர் மாவட்டம் சேத்தி யாதோப்பு, விருதாச்சலம், திரு வாரூர் மாவட்டம் வலங்கைமான், நாகை மாவட்டம் சீர்காழி ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x