Published : 09 Aug 2019 04:53 PM
Last Updated : 09 Aug 2019 04:53 PM

ஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; திருநெல்வேலியில் நடக்கிறது

நெல்லை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள சாராள் தக்கர் கல்லூரி கலையரங்கில் வரும் ஞாயிறன்று (ஆக.11) நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கும் வகையில், இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள சாராள் தக்கர் கல்லூரி கலையரங்கில் வரும் ஞாயிறன்று காலை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான வீ.ப.ஜெயசீலன், ஐஏஎஸ்., மத்திய அரசின் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், ‘இந்து தமிழ் திசை’நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற இருக்கிறார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்டக் கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு இலவசப் பயிற்சியும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 9773001174 என்ற செல்போன் எண்ணுக்கு, HTTN தங்களது பெயரை குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி, பதி வுசெய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிக்கான டி.வி. பார்ட்னராக நெல்லையிலுள்ள மயூரி டி.வி., SMS பார்ட்னராக ஸ்பார்க் பிசினஸ் சொலூஷனும் இணைந்திருக்கிறது.

இலவசமாகப் பதிவு செய்துகொள்ள க்ளிக் செய்யவும்:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x