Published : 08 Aug 2019 06:58 AM
Last Updated : 08 Aug 2019 06:58 AM

ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை; ஒரே ஆண்டில் நவீனமயமான கிராமப்புற அரசுப் பள்ளி: முன்னாள் மாணவர்கள், மக்கள் பங்களிப்புடன் சாத்தியமாக்கிய தலைமை ஆசிரியர்

இ. ஜெகநாதன்

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள கிராமப் பள்ளி ஒன்று, ஒரே ஆண்டில் ஏசி வகுப்பறையுடன் கூடிய நவீனப் பள்ளியாக மாறியுள்ளது. கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளியின் வளர்ச்சிக்கு பணியாற் றிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிவகங்கை அருகே பாகனேரி கிராமத்தில் ஓ.இ.ஆர்.எம். அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் பாகனேரி, காடனேரி, அம்மன்பட்டி, நடராஜபுரம், கொட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங் களைச் சேர்ந்த மாணவர்கள் படிக் கின்றனர்.

1965-ல் தொடங்கிய இப்பள்ளி காலப்போக்கில் கவனிப்பின்றி போனது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங் கியது. கடந்த ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பிரிட்டோ, முன்னாள் மாணவர்கள், கிராம மக்களின் பங்களிப்புடன் படிப்படியாக பள்ளியின் வளர்ச் சிக்கு பங்காற்றி, தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றியுள்ளார்.

பழுதான வகுப்பறைகள் சீர மைக்கப்பட்டு, மின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர், மாணவர்கள் செயல்பாடுகளை கண்காணிக்கவும், இரவு நேரங்க ளில் சமூகவிரோத செயல்களை தடுக்கவும் பள்ளி முழுவதும் 8 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. மாணவர்களுக்காக ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப் பட்டுள்ளது. மேலும் வகுப்பறை யில் ஏசி வைக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படாமல் இருக்க இன் வெர்ட்டர் வசதி செய்யப்பட்டுள் ளது. வீடியோக்கள் மூலம் பாடம் நடத்த டிவி உள்ளது.

வகுப்பறைகளில் ஸ்பீக்கர், ஆட்டோமேட்டிக் பெல், தேவை யான இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசி ரியர்களும் நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்தியே பாடம் நடத்துகின்றனர். இதனால் மாண வர்களின் எண்ணிக்கையும் படிப் படியாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போது 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 200 மாணவர்களும், 18 ஆசிரியர்களும் உள்ளனர். தனி யாருக்கு நிகராக அரசு பள்ளியை ஒரே ஆண்டில் மாற்றிய தலைமை ஆசிரியரை கிராம மக்கள் மனதார பாராட்டுகின்றனர்.

இதுகுறித்து தலைமை ஆசி ரியர் பிரிட்டோ கூறும்போது, "கிராம மக்களின் ஒத்துழைப்போடு பள்ளியை மேம்படுத்தி வரு கிறோம். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தோம். எங்குமே இல்லாத அளவுக்கு 15 ஏக்கரில் எங்கள் பள்ளியில் மைதானம் உள்ளது. இதனால் எமது பள்ளி மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்கு கின்றனர். சமீபத்தில் ‘பீச் வாலி பால்’ போட்டியில் மாநில அள வில் சிறப்பிடம் பெற்றனர்.

இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் சிலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர். தற்போது சிசிடிவி கேமரா பொருத்தியதால் அந்த பிரச்சினையும் இல்லை. மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள தால் தொலைவில் உள்ள மாணவர் களும் எங்கள் பள்ளியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள் ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x