Published : 02 Aug 2019 04:12 PM
Last Updated : 02 Aug 2019 04:12 PM

அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு

வேலூர்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சி வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் ஆகியோர், ஆம்பூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டம் முடிந்த பின்பு அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது, அனுமதியின்றி கூட்டம் நடத்தப்பட்டதாக தங்களுக்கு புகார் வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்ட தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் சுஜாதா ஆம்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதன்பின்னர், மு.க.ஸ்டாலின், கதிர் ஆனந்த், திமுக நிர்வாகிகள், மண்டப உரிமையாளர் ஜக்கரியா, சுன்னத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு அதிகாரியின் உத்தரவை மீறியது, தனிப்பட்ட செல்வாக்கை தவறுதலாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஸ்டாலின் உள்ளிட்டோர்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x