Published : 15 Jul 2015 07:44 AM
Last Updated : 15 Jul 2015 07:44 AM
மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொண்டு வந்த கேமின் நிறுவனம் அப்பணியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் பணிகள் நடை பெற்று வருகின்றன.
ரூ.20 ஆயிரம் கோடி
இதன்படி வண்ணாரப் பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையத்துக்கும், மற்றொரு வழியில் சென்ட்ரல், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக பரங்கி மலைக்கும் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகளை கேமின் நிறுவனமும், சுரங்கப் பாதைகளை அமைக்கும் பணியை மாஸ் மெட்ரோ என்ற ரஷ்ய நிறுவனமும் செய்துவந்தன. சுரங்கம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்த மாஸ் மெட்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறியது. இதையடுத்து, சுரங்கம் தோண்டும் பணியையும், ரயில் நிலையங்களை அமைக்கும் பணியையும் கேமின் நிறுவனம் மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் மேற்கொள் ளாததால் கேமின் நிறுவனத்தை வெளியேறுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மே தினப் பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையி லான மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புது டெண்டர்
``மெட்ரோ ரயில் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க கேமின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டோம். ஆனால், அவர்கள் குறித்த காலத்தில் பணியை மேற்கொள்ளவில்லை. இதனால், அந்நிறுவனம் வெளி யேற்றப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளை வேறொரு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது,
இதற்காக விரைவில் டெண்டர் அறிவி்த்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்படும். எஞ்சியுள்ள பணிகளின் மதிப்பு ரூ.800 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT