Published : 29 Jul 2019 08:44 AM
Last Updated : 29 Jul 2019 08:44 AM

ராணுவ தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம்: ஊழியர் சங்கங்கள் முடிவு

சென்னை

நாடு முழுவதும் உள்ள 41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, ஒரு மாதம் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் பி.சீனிவாசன் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராணுவ தளவாட தொழிற் சாலை வாரியத்தின் கீழ், 41 தொழிற் சாலைகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இவற்றில் ராணுவத்துக்கு தேவையான பல் வேறு ஆயுதங்கள், பீரங்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல் வேறு தளவாட பொருட்கள் தயா ரிக்கப்பட்டு இந்திய ராணுவத்துக்கு அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் ஆவடி, திருச்சி, ஊட்டி, அரவங்காடு, புனே, ஜபல்பூர், கான்பூர், கொல்கத்தா, சண்டிகர், மேடக் என நாடு முழு வதும் பல்வேறு இடங்களில் இத்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலை கள் மூலம், சிறு, குறு நிறு வனங்களை சேர்ந்த 10 லட்சம் பேர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் தொழிற்சங்கங்களுக்கு அளித்த வாக் குறுதியை மீறி தற்போது இவற்றை கார்ப்பரேஷனாக மாற் றும் இந்த முடிவை எதிர்த்து புது டெல்லியில் கடந்த 25-ம் தேதி யன்று நடைபெற்ற பாரதிய பிரதிரக்ஷா சங்கம், அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்களின் கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஆக.20-ம் தேதி முதல் செப்.19-ம் தேதி வரை ஒருமாத காலத்துக்கு வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட் டுள்ளது. wஇந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தில் 10 ஆயிரம் பேரும், நாடு முழுவதும் 90 ஆயிரம் ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு சீனிவாசன் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x