Published : 23 Jul 2019 08:06 AM
Last Updated : 23 Jul 2019 08:06 AM

நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்து வருகிறோம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை 

நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள தமிழக மாணவர்களை தயார் செய்து வருகிறோம் என்று அமைச் சர் செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.

சென்னை போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளி யில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் பங்கேற்று பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம் பல மாநிலங்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இதுவரை 54 லட்சத்து 32 ஆயிரம் மடிக்கணினிகள் வழங் கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இலவச காலணி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஷூ, சாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

மேலை நாடுகளும் வியந்து பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. 6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 9,10,11,12-ம் வகுப்பு மாணவர் களின் வகுப்புகளில் இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் படித்து விட்டு வேலை யில்லாமல் உள்ளனர். எனவே, மாணவ, மாணவிகள் எதிர் காலத்தை திட்டமிட்டு தற்போது இருந்தே நன்றாக படிக்க வேண் டும்.

இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நம்பிக்கையுடன் நீட் தேர்வை எதிர்கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள மாணவர் களை தயார் செய்து வருகிறோம்.

9,10,11-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகை யில் ஐசிடி என்று சொல்லக்கூடிய புதிய தகவல் தொழில்நுட்ப வசதியை கொண்டு வர நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் செப்டம்பர் இறுதிக் குள் நிறைவேற்றப்பட உள் ளன.

புதிய கல்வி கொள் கையை பொறுத்தவரை மக்களி டையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. இரு மொழி கொள்கை தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து இருக்கும். அதில், எந்த மாற்று கருத்தும் கிடையாது. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை" என்றார்.

நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x