Published : 22 Jul 2019 06:20 PM
Last Updated : 22 Jul 2019 06:20 PM
புதுச்சேரி
புதுச்சேரியில் சட்டப்பேரவை நிகழ்வுகளை பெண் எம்எல்ஏ புறக்கணித்து தொகுதியில் குப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் இன்று (திங்கள்கிழமை) நடபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏ கோபிகா பங்கேற்கவில்லை. இதில் கோபிகா சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணித்ததாகத் தெரிவித்துள்ளார்.
திருபுவனை தொகுதியிலுள்ள மதகடிப்பட்டு திருவண்டார்கோயில், கலிதீர்த்தாள்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 25 நாட்களாய் குப்பைகளை வாரவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் சட்டப்பேரவை நிகழ்வுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்து குப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக கோபிகா கூறுகையில், "மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டப்பேரவையில் பங்கேற்றுப் பயனில்லை. மக்கள் பிரச்சினையைக் கையில் எடுத்து சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணித்துள்ளேன். குப்பை எடுக்கும் பணியைத் தொடங்கி வைத்து, குப்பையைத் தற்காலிகமாக ஒரு இடத்தை தேர்வு செய்து கொட்ட வைத்தேன்" என்று குறிப்பிட்டார்.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரைத் தொடர்புகொண்டு உடனடியாக அன்றாடக் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடத்தினைத் தேர்வு செய்து தருமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
-செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT