Published : 27 Jul 2015 09:16 AM
Last Updated : 27 Jul 2015 09:16 AM
மழை பெய்த பிறகும் சென்னை யின் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயரவில்லை.
பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய நீர் தேக்கப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரு கிறது. எனினும் அந்த நீர் தேக்கங் களில் நீரின் அளவு குறைந் துள்ளது.
பூண்டி நீர் தேக்கத்தில் 23-ம் தேதி 21 மி.மீ, 24-ம் தேதி 31 மி.மீ, 25-ம் தேதி 15 மி.மீ மழை பெய் துள்ளது. அதே போல் சோழவரம் நீர் தேக்கத்தில் 23-ம் தேதி 29 மி.மீ, 24-ம் தேதி 44 மி.மீ 25-ம் தேதி 31 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
செங்குன்றம் ஏரியில் 23-ம் தேதி 41 மி.மீ, 24-ம் தேதி 4.2 மி.மீ 25-ம் தேதி 35 மி.மீ மழை பெய்திருந்தது. செம்பரம் பாக்கத்தில் 23-ம் தேதி 33 மி.மீ மழையும், 24-ம் தேதி 2 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.
இந்த மழையைத் தொடர்ந்து பூண்டி நீர் தேக்கத்தில் மட்டும் நீர் மட்டம் சற்று உயர்ந்துள்ளது. கடந்த 22-ம் தேதி 0.048 டி.எம்.சியாக இருந்த நீர் மட்டம் 25-ம் தேதி 0.053 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது. பிற நீர் தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 20-ம் தேதி நான்கு நீர் தேக்கங்களிலும் மொத்தமாக 0.961 டி.எம்.சி நீர் இருந்தது.
இது படிப்படியாக குறைந்து 23-ம் தேதி 0.922 டி.எம்.சியாகவும், 25-ம் தேதி 0.897 டி.எம்.சியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT