Published : 20 Jul 2019 10:21 AM
Last Updated : 20 Jul 2019 10:21 AM

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா பொறுப்பேற்றாலும் வரவேற்போம்: சேலத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

சேலம்

‘அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும். பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றாலும் வரவேற்போம்,’ என தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட காமராஜர் அறக்கட்டளை சார்பில் தமிழ்ச் சங்கத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கர்நாடகாவில் ஆளும்கட்சியை கலைக்க மத்திய அரசு துடிக்கிறது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக மாநில அரசைக் கலைத்து விட்டு, பாஜக தன்னை நிலை நிறுத்த முயற்சி செய்கிறது. ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும், கட்சி நிகழ்ச்சி, பாராளுமன்ற தொடர்களில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும். ராகுல்காந்தி, சோனியா, பிரியங்கா இல்லாத காங்கிரஸ் கட்சியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றால் வரவேற்போம். ராகுல்காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்பதே எங்களது ஆசை. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த கட்சிகளின் கூட்டணி பலமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக திமுக தலைமையும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து முடிவெடுக்கும்.

இவ்வாறு தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x