Last Updated : 15 Jul, 2019 02:44 PM

 

Published : 15 Jul 2019 02:44 PM
Last Updated : 15 Jul 2019 02:44 PM

போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக புகார்: நடிகர் தனுஷ் மீது வழக்கு பதியக்கோரிய மனு ஒத்திவைப்பு

வாரிசுரிமை வழக்கில் போலி பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கின் விசாரணையை மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி வருகிறார். தனுஷிடம் பராமரிப்புப் பணம் கேட்டு கதிரேசன் தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில், நடிகர் தனுஷ் சார்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும், இதனால் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி கதிரேசன் சார்பில்உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தனுஷூக்கு எதிரான வழக்கு இன்று (திங்கள் கிழமை) விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x