Published : 09 Jul 2015 07:47 AM
Last Updated : 09 Jul 2015 07:47 AM

விஐடி பல்கலை. முன்னாள் மாணவர் ரூவாண்டா நாட்டு கல்வி அமைச்சராக நியமனம்

விஜடி பல்கலைக்கழக முன்னாள் மாணவரான பாபையாஸ் மலிம்பா முசாபரி ரூவாண்டா நாட்டின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஐடி பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

ரூவாண்டா நாட்டின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.எம்.முசாபரி, தான்சானியா நாட்டின் தாரே இஸ்லாம் பல் கலைக்கழகத்தில் வணிகம் மற் றும் மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றவர். தொடர்ந்து ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையத்தில் நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் தில் முதுகலை பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ரூவாண்டா நாட்டில் கல்விப் பணியில் சேர்ந்து பல்வேறு சிறப்புகளைப் பெற்ற முசாபரி, விஐடி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக 2009-ம் ஆண்டு சேர்ந்தார். இங்கு நிதி மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி கல்வியில் தத்துவ பேரறிஞர் பட்டம் (பிஎச்.டி.) பெற் றார். இவரது ஆராய்ச்சி பணிக்கு விஐடி பேராசிரியர் கணேசன் வழிகாட்டியாக இருந்தார்.

முசாபரியின் கல்வித் திறமையை அறிந்த ரூவாண்டா பிரதமர் அனாஸ்டாசே முரெகேசி அவரை ரூவாண்டா கல்வி அமைச்சராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். முசாபரிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x