Published : 30 Jul 2015 09:57 AM
Last Updated : 30 Jul 2015 09:57 AM
அப்துல் கலாம் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரஜினி காந்த் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி, பாரதியார், காமராசர் ஆகியோரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
ஆனால் கலாம் வாழ்ந்த காலத்தில் வாழ்கிற ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது. சாதாரணமாக இருந்து உயர் பதவிக்கு போனாலும் அவர் அடக்கமாகவும் எளிமையாகவும் இருந்தார்.
கோடிக்கணக்கான மக்களின் ஆதர்சமாக உள்ளார். மாணவர்களோடு நெருக்கமாக இருந்து அவர்களை எல்லா வழிகளிலும் ஊக்குவித்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அப்துல் கலாமின் மறைவு நம் நாட்டுக்கு பேரிழப்பு. மாளிகையில் உயர் பதவியில் இருந்தாலும் அவரது சிந்தனையெல்லாம் எளிய மக்களைப் பற்றியும், எதிர்கால இந்தியாவை வலிமையாக்க மாணவர்களை சந்திப்பதிலும்தான் இருந்தது.
கடைசி நிமிடம் வரை மாணவர்களிடையே அவர் உரையாடிக்கொண்டிருந்தார் என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT