Published : 10 Jul 2015 07:54 AM
Last Updated : 10 Jul 2015 07:54 AM
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடந்த 1-ம் தேதி முதல் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் சென்னை போக்குவரத்து போலீஸில் பணியாற்றும் 2 போலீஸார் ஹெல்மெட் அணியாமல் சென்றதால், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிக்கியதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT