Published : 13 Jul 2015 10:21 AM
Last Updated : 13 Jul 2015 10:21 AM

கார்கள் மோதல்: ப.சிதம்பரம் காயமின்றி தப்பினார்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி செல்வதற்காக நேற்று காலை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரின் முன்னும் பின்னும் பாதுகாப்பு போலீஸாரின் வாகனங்கள் சென்றன. கிண்டி ராஜ்பவன் அருகே சிக்னலில் ப.சிதம்பரத்தின் கார் நின்றது. அப்போது பின்னால் வந்த ஒரு கார், பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் மீது மோதியது.

போலீஸாரின் வாகனம், ப.சிதம் பரம் காரின் பின்பக்கம் இடித்தது. இதில் காரின் விளக்குகள் உடைந்தன. பம்பரும் வளைந்தது. ப.சிதம்பரம் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார். ஆனால், பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் சேதம் அடைந்தது. அதில் இருந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட் டது. விபத்து நடந்ததும் காரில் இருந்து இறங்கிய ப.சிதம்பரம், பாதுகாப்பு போலீஸாரிடமும் விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த பாலாஜி, விஜயகுமார், ஜெய்சன், பூஜா ஆகியோரிடமும் விசாரித்தார்.

அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. அவர்களை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிவிட்டு ப.சிதம்பரம் விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் புதுச்சேரியில் இருந்து சைதாப்பேட்டை வந்துள்ளனர். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x