Published : 10 Jun 2015 10:45 AM
Last Updated : 10 Jun 2015 10:45 AM

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலையின் ஒரு அறை முற்றிலுமாக தரைமட்டமானது.

விருதநகர் மாவட்டம் சிவகாசி அருகே போர்ரெட்டிபட்டி எனும் இடத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலையில் இயந்திரத்தில் மருந்து கலக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரு அறை முற்றிலுமாக தரைமட்டமானது. காலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x