Published : 23 Jun 2015 07:21 AM
Last Updated : 23 Jun 2015 07:21 AM

மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனம்: முதன்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் வாகன சிகிச்சை சேவை, நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னையில் கடந்த 16-ம் தேதி இந்தச் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த சிகிச்சை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 6 வயது வரையிலான மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் மற்றும் செவித்திறன் குறையுள்ள குழந்தைகளுக்கு என 32 பயிற்சி மையங்களும், பார்வைத் திறன் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 18 பயிற்சி மையங்களும் செயல்படு கின்றன. சிகிச்சை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பயிற்சி மையங்களுக்கு பேருந்து களில் வருவதற்காக அரசு பயணச் சலுகை வழங்கினாலும், மாற்றுத் திறனாளிகள் முழு அளவில் சிகிச்சை பெற முடியவில்லை.

இதையடுத்து, கடந்த 2013, மே மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என 32 நடமாடும் வாகன சிகிச்சை பிரிவு தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ரூ. 4.4 கோடியில் வாகனங்கள் வாங்கப் பட்டு, அதில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கருவிகள் பொருத்தப்பட்டன.

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கண்காணிப்பில் இயங்கும் இந்த சிகிச்சை வாகனத்தில், பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர், மூடநீக்கியல் வல்லுநர் ஆகியோர் இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடமாடும் வாகன சிகிச்சை சேவையை, மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று தொடக்கிவை த்தார். காஞ்சிபுரம் வட்டத்துக்குட் பட்ட பகுதியில் வசிக்கும் மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு பிசியோதெரபி எனப்படும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x