Published : 18 Jun 2015 09:21 PM
Last Updated : 18 Jun 2015 09:21 PM
ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆயிரக்கணக்கான கோடி அந்நிய செலவாணி மோசடியிலும், வரி ஏய்ப்பிலும் சம்பந்தப்பட்டு அமலாக்கப் பிரிவினால் தேடப்பட்டு வருபவர் லலித் மோடி. இந்தியாவுக்கு வந்து வழக்கை சந்திக்காமல் லண்டனில் பதுங்கி வாழும் அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் உதவி செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்திய இறையாண்மை. தேசப் பற்று குறித்து அடிக்கடி பேசும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சுஷ்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது.
இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரான இந்தச் செயலை மனிதாபிமானம் என நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. இதற்கு மத்திய அரசு தார்மீகப் பொறுப்பேற்று, சுஷ்மா, வசுந்தரா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT