Published : 05 May 2015 09:55 PM
Last Updated : 05 May 2015 09:55 PM
பல்வேறு தனியார் நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்முகத்தேர்வில் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது,
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக தொழில்நிறுவன கூட்டு மையம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாநில அளவில் நடத்திய வளாக நேர்முகத்தேர்வில் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தொட்டியம் கொங்குநாடு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 7-ம் தேதி (நாளை) நடக்கிறது.
இதுபோன்ற பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி (சென்னை மண்டலம்) சென்னை தாழம்பூர் அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில் 14-ம் தேதியும், கோவை கொண்டாம்பட்டி ஸ்ரீ ஈஸ்வர் தொழில்நுட்பக் கல்லூரியில் 21-ம் தேதியும் (கோவை மண்டலம்) நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT