Published : 02 May 2015 01:14 PM
Last Updated : 02 May 2015 01:14 PM

திருவள்ளூர்: செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

செம்மர கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை திருவள்ளூர் மாவட்டம் மொண்டியம்மன் நகரில் ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடும் பணிகளில் ஆந்திர போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் முக்கிய குற்றவாளிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ஆந்திர போலீஸாருக்கு தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் செங்குன்றம், அலமாதி ஆகிய பகுதிகளில் உள்ள கிடங்குகள் மற்றும் கிராமங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

மொண்டியம்மன் நகரில் சோதனை நடத்தியதில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து ஆந்திர போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x