Published : 22 May 2015 10:51 AM
Last Updated : 22 May 2015 10:51 AM

பார்வையற்றோர் பிரிவில் சென்னை மாணவி முதலிடம்: ஐஏஎஸ் ஆவதே லட்சியம்

சென்னை லிட்டில் பிளவர் பார்வைத் திறன் குறையுடையோர் பள்ளி மாணவி எம்.ஆண்டாள் 477 மதிப்பெண்கள் பெற்று பார்வையற்றோர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

முதலிடம் பிடித்தது தொடர்பாக அவர் கூறும்போது, “நான் பிரெய்லி முறையில் படித்தேன். எனது வெற்றிக்கு ஆசிரியைகளின் ஒத்துழைப்புதான் காரணம். ஐஏஎஸ் ஆவது எனது லட்சியம்” என்றார். இதே பள்ளியில் படித்த எம்.முனீஸ்வரி 459 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி பி.நந்தினி தேவி 480 மதிப்பெண்கள் பெற்றுள்ளபோதிலும் ஆங்கில வழியில் படித்ததால் ரேங்க் பட்டியலில் இடம்பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x