Published : 05 May 2015 07:13 AM
Last Updated : 05 May 2015 07:13 AM

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு பற்றி ஆய்வு: ஆர்டிஓக்களுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு

தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் செய்து, அறிக்கையை வரும் 30-ம் தேதிக் குள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் களுக்கு அனுப்ப வேண்டுமென போக்குவரத்து துறை ஆணை யரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கா மல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்றும், சில இடங்களில் பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் ஆண்டுதோறும் முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப் பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங் கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இதற்கிடையே, இந்த ஆண்டில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்து வது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரகம் ஆர்டிஒக்க ளுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பள்ளி வாகனங்க ளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 11-ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட ஆர்டிஓக்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்களில் ஆய்வு நடத்த வேண்டும். பாதுகாப்பு தொடர்பாக 16 அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும். குறைபாடுகள் இருந்தால், ஒரு வாரத்தில் சரி செய்யுமாறு உத்தரவிடப்படும். வாகனங்களில் குறைபாடுகள் இருந் தால் தகுதி சான்று (எப்.சி) அளிக்கப் படமாட்டாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்படும். பள்ளி வாகனங்களில் நடத்திய ஆய்வு அறிக்கையை வரும் 30ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்க ளுக்கு அனுப்ப வேண்டும்.’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x