Published : 17 May 2015 10:25 AM
Last Updated : 17 May 2015 10:25 AM

தமிழகத்தில் கன மழை தொடரும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது:

லட்சத் தீவு மற்றும் கேரள கரை யருகே உருவாகிய காற்று மேல் அடுக்கு சுழற்சி, அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள உள் மாவட்டங்களிலும் கன மழை இருக் கும். தமிழகத்தின் மற்ற இடங் களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நேற்று பதிவான மழை நிலவரப்படி திண்டுக்கல் லில் ஒரே நாளில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த கோடைகாலத்தில் ஒரு மாவட்டத்தில் பெய்த அதிகபட்ச மழை இதுதான். கடந்த ஆண்டு கத்தரி வெயில் காலத்தில் பாபநாசத்தில் ஒரே நாளில் 30 செ.மீ மழை பெய்திருந்தது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் 17 செ.மீ, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 16 செ.மீ, திரு வாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி, கோவை மாவட்டம் சூளூர் மற்றும் பீளமேடு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆகிய இடங் களில் 9 செ.மீ மழை பதிவாகியது. தருமபுரி, புதுக்கோட்டை, நாகப் பட்டினம், காஞ்சிபுரம், நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களி லும் மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x