Published : 29 May 2015 09:31 AM
Last Updated : 29 May 2015 09:31 AM
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வரும் ஜூன் 9-ம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முந்திரி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முந்திரி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் க.செல்வ ராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தங்கமோகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அரசு முந்திரி தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் கூலியை அதிகரித்தல், பி.எஃப்., ஓய்வூதியம் போன்ற சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 9-ம் தேதி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT