Published : 26 May 2015 07:14 AM
Last Updated : 26 May 2015 07:14 AM

மோடி அரசுக்கு பாரிவேந்தர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மே 26-ம் தேதி ஓராண்டை நிறைவு செய்யும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஓராண்டில் இந்தியாவின் பெருமையை உலக நாடுகள் உணரச் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்துள்ளது.

மத்தியில் குவிந்துள்ள அதிகாரத்தை அனைத்து மாநிலங் களுக்கும் பரவலாக்கியது, உள்கட்டமைப்பை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பது ஆகியவை மோடி அரசின் முக்கிய நடவடிக்கையாகும். மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் பிரதமர் மோடியே தனி கவனம் செலுத்தி தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x