Published : 30 May 2015 10:07 AM
Last Updated : 30 May 2015 10:07 AM
நாகப்பட்டினம் அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
கடந்த 22-ம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து ஒரு ஃபைபர் படகில் மீன் பிடிக்கப் புறப்பட்ட, கிங்ஸ்லீ, சுஜீத் பியாந்தே, மகாதேவ், இஜாவ் மகேஷ்குமார், லியோரே ரமேஷ் ஆகியோர் நேற்றுமுன்தினம் நாகப்பட்டினத்துக்கு கிழக்கே சுமார் 30 கடல் மைல் தொலை வில் மீன் பிடித்துக் கொண்டி ருந்தனர்.
அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய கடலோரக் காவல் படையினர் அவர்களிடம் விசாரணை நடத் தினர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தாக 5 மீனவர்களையும் கைது செய்த இந்திய கடலோரக் காவல் படையினர், அவர்களது ஃபைபர் படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர், காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து சென்று வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சென்னை புழல் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT