Published : 20 May 2015 10:53 AM
Last Updated : 20 May 2015 10:53 AM
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் நான் செய்வேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
"ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு வேளை கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் நான் மேல்முறையீட்டுக்குப் போவேன்.
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடிக்கடி குறை சொல்லி ஜெயலலிதா கடிதம் எழுதி வந்தார். என்னையும் குறை சொல்லி கடிதம் எழுதினார். நரேந்திர மோடி பள்ளிக்கூட முதல்வர் அல்ல, நான் மாணவனும் அல்ல. ஜெயலலிதாவின் கடிதங்கள் கோபத்தைத்தான் ஏற்படுத்தின" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT