Published : 02 May 2015 08:52 AM
Last Updated : 02 May 2015 08:52 AM
இந்திய தொலை தொடர்புத் துறை குவைத் திட்டப் பணிகளுக்கு அனுபவம் மிக்க பொறியாளர்கள் தேவைப் படுவதாக அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நேற்று வெளி யிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது:
இந்திய தொலை தொடர்புத் துறை குவைத் திட்டப் பணிகளுக்கு, 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள எஸ்.எம்.இ. பொறியாளர்கள், பி.ஆர்க் பட்டத்துடன் 10 ஆண்டுகள் அனுபவமுள்ள கட்டிட வடிவமைப்பாளர்கள், 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் மற்றும் கட்டமைப்பு பிரிவு பட்டதாரிகள், டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு அனுபவம் உள்ள ஆட்டோகேட் வரைவாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு தகுதி யும், அனுபவமும் உள்ளவர்கள் தங்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு வண் ணப் புகைப்படத்துடன் omcresum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அரசு வெளி யிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT