Published : 06 May 2015 07:28 AM
Last Updated : 06 May 2015 07:28 AM
சைதாப்பேட்டையில் கட்டுமானப் பணி நடக்கும் அடுக்குமாடிக் கட் டிடத்தில் புகுந்த மர்ம கும்பல், வெடிகுண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட் டது.
சென்னை மேற்கு சைதாப் பேட்டை குமரன் நகரில் உள்ள கம்பன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகி றது. ஜெகநாதன் என்ற கான் ட்ராக்டர் கட்டிவருகிறார். இவர் திமுக பிரமுகர். நேற்று காலை வேலை நடக்கும் இடத்துக்கு வந்த ஜெகநாதன், கட்டிடப் பணியை பார்த்துவிட்டு சென் றார். அவர் புறப்பட்ட சில நிமிடங் களில் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 6 நபர்கள் கட்டிடத்துக்குள் புகுந்தனர்.
அவர்களில் 2 பேர் துப்பாக்கி வைத்திருந்தனர். மற்றவர்கள் கத்தியுடன் இருந்தனர். இதைப் பார்த்ததும், கட்டிடத் தொழிலாளி கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். கட்டிட மேஸ்திரியை அழைத்த மர்ம நபர்கள், ‘ஜெக நாதன் எங்கே?’ என ஆவேசமாக கேட்டனர். அவர் தெரியவில்லை என்றார். இதில் கோபம் அடைந்த நபர்கள், 2 குண்டுகளை எடுத்து கட்டிடத்தின் மீது வீசினர். பயங் கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து புகை மண்டலம் உருவானது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வருவதற்குள், அந்த கும்பல் காரில் ஏறித் தப்பியது.
குண்டு வெடித்ததில் ஒரு பெண் தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை. குண்டு வெடித் ததால் கட்டிடத்தின் ஒரு இடத் தில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது. ‘கான்ட்ராக்டர் ஜெக நாதனை கொல்லும் நோக்கத் தில்தான் அவர்கள் வந்ததாக தெரிகிறது’ என்று கட்டிடத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அடையாறு காவல் துறை துணை ஆணையர் கண் ணன், சைதாப்பேட்டை உதவி ஆணையர் தம்புசாமி, குமரன் நகர் ஆய்வாளர் கணேஷ் மற்றும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வெடித்தது நாட்டு வெடி குண்டு அல்ல. தீபாவளி பட்டாசு ரகம்தான். வேளச்சேரியில் உள்ள ஒரு இடம் தொடர்பாக ஜெகநாதனுக்கும் தேனாம்பேட் டையை சேர்ந்த சி.டி.மணி என்ற ரவுடிக்கும் பிரச்சினை இருந்துள் ளது. அதுதொடர்பான மோதலால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. சி.டி.மணியின் கூட்டாளிகள் குறித்து விசாரித்து வருகிறோம். ஜெகநாதன் மீதும் ஏற்கெனவே பல அடிதடி வழக்கு கள் இருந்தன. அந்த முன்விரோ தத்தால்கூட இச்சம்பவம் நடந்தி ருக்கலாம். பட்டாசு வெடித்த கட்டிடத்தின் அருகே ஒரு கண் காணிப்பு கேமரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT