Published : 08 May 2015 09:13 AM
Last Updated : 08 May 2015 09:13 AM

பிளஸ் 2 தேர்வில் 64 கைதிகள் தேர்ச்சி

புழல் சிறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய 64 கைதிகள் தேர்ச்சி பெற்றனர்.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளும் பிளஸ் 2 தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு 65 கைதிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த 65 பேருக்கும் சென்னை புழல் மத்திய சிறையில் வைத்து தேர்வு நடத்தப்பட்டது. இவர்களில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கார்த்திக் என்ற கைதி 1,062 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பிடித்தார். அடுத்ததாக கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சையதுமுகமது புகாரி 1,059 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x