Published : 08 Mar 2014 04:24 PM
Last Updated : 08 Mar 2014 04:24 PM

தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும்: பிரவீன் குமார்

தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

சென்னயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், " தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார்கள் தெரிவிக்க மாவட்டம் தோறும் கட்டணமில்லாத தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் கொடுப்பது பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க நாளை சிறப்பு முகாம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x