Published : 09 May 2015 07:47 AM
Last Updated : 09 May 2015 07:47 AM

தட்டச்சு தேர்வு முடிவுகள் மே 11-ல் வெளியாகும்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அரசுத்துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர வேண்டுமானால் தொழில்நுட்பக் கல்வித்துறை நடத்தும் மேல்நிலை, கீழ்நிலை தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தொழில்நுட்பத் தகுதி பெற்றால்தான் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வுகளை ஏறத்தாழ 81 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த முறை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் சற்று தாமதம் ஆகிவிட்டது. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 11) வெளியிடப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x