Published : 22 May 2015 07:55 AM
Last Updated : 22 May 2015 07:55 AM
போதைப் பொருள் கடத்திய நைஜீரிய இளைஞர் சென்னையில் கைது செய்யப் பட்டார்.
தமிழக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சென்னை பூந்தமல்லி பகுதியில் ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு நைஜீரியாவை சேர்ந்த இசோபா அகஸ்டின் சிபுக்(29) என்பவர் இருந்தார். இந்த சோதனையின்போது 190 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ என்ற போதைப் பொருள் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு போதை பொருட்களை கடத்தி கொண்டு வந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT