Published : 30 Apr 2015 07:30 AM
Last Updated : 30 Apr 2015 07:30 AM
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சார்நிலை பணியில் 6 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 11.10.2014 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக் கப்பட்ட 30 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் 15-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத் தில் நடைபெறும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் களுக்கு தனித்தனியே தகவல் அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT