Published : 06 Apr 2015 10:52 AM
Last Updated : 06 Apr 2015 10:52 AM

திருச்சி விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.33.75 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் ‘சலவைப் பெட்டியின் கைப்பிடிக்குள்’ 499 கிராம் தங்கம், சென்னை சோபர்ஸ்கான் 556 கிராம் தங்கம், இளையான்குடி இம்ரான்கான் 100 கிராம் தங்கம், இளையான்குடி சர்புதீன், தனது உடலில் 100 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்துவந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மொத்தம் 1.25 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.33.75 லட்சம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x