Published : 25 Apr 2015 12:26 PM
Last Updated : 25 Apr 2015 12:26 PM

பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது. இந்த இரு பொதுத் தேர்வுகளும் வியாழக்கிழமைகளில் தொடங்கியது.

இந்த நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு மே 7-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 21-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பொதுத் தேர்வு முடிவுகளும் வியாழக்கிழமைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x