Published : 02 Apr 2015 09:56 AM
Last Updated : 02 Apr 2015 09:56 AM
இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் உயர் கல்வி பயில்வதற்கு ரஷ்யப் பல்கலைக் கழகங்கள் உதவித் தொகை வழங்குகின்றன.
இதுதொடர்பாக தென்னிந்தியாவுக்கான ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் தூதர் செர்கெய் எல்.கட்டோவ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ரஷ்ய அரசின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகமும், ரஷ்ய கூட்டமைப்பின் மாநில விவகாரங்களுக்கான காமன்வெல்த் ஃபெடரல் ஏஜென்சியும், ரஷ்யாவிலுள்ள 50-க்கும் மேற்பட்ட ரஷ்யப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து “ரஷ்யாவில் கல்வி பயில இதுவே சரியான தருணம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யாவில் உயர் கல்வி பயில்வதற்கு உதவித் தொகைகள் வழங்கப்படும். மேலும், இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘ஒலிம்பியாட்’ எனப்படும் திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்பட்டு 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT