Published : 17 Apr 2015 09:05 AM
Last Updated : 17 Apr 2015 09:05 AM
பஸ்ஸில் பெண் டாக்டரின் பர்ஸ் திருடப்பட்டது. அதில் இருந்த ரூ.15 ஆயிரத்தை திருடியவர், பர்ஸில் இருந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஏடிஎம் மையத்தில் ரூ.50 ஆயிரம் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பினார்.
மதுரையை சேர்ந்தவர் மங்கையர்க்கரசி. மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார். வேலை விஷயமாக சென்னைக்கு வந்தார். திருமங்கலத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். பஸ்ஸில் சென்ட்ரலுக்கு வந்துவிட்டு, திருமங்கலத்துக்கு பஸ் ஏற காத்திருந்தார்.
அப்போது தனது கைப்பை கிழிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே இருந்த பர்ஸ் திருடப்பட்டிருந்தது. அதில் ரூ.15 ஆயிரம், 2 ஏடிஎம் கார்டுகளை வைத்திருந்தார். ஏடிஎம் கார்டுக்கான ரகசிய எண்ணையும் (பாஸ்வேர்டு) அதிலேயே எழுதிவைத்திருந்தார்.
அவரது பர்ஸை திருடியவர், அதில் இருந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி சென்ட்ரல் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தையும் சிறிது நேரத்தில் எடுத்துவிட்டார்.
ரூ.65 ஆயிரத்தை பறிகொடுத்த டாக்டர் மங்கையர்க்கரசி இது குறித்து பெரியமேடு காவல் நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளார். ஏடிஎம் மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து திருடனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT