Published : 12 Apr 2015 11:48 AM
Last Updated : 12 Apr 2015 11:48 AM

வாணியம்பாடி அருகே குட்டை தண்ணீரை குடித்த கால்நடைகள் பலி: அதிகாரிகள் விசாரணை

வாணியம்பாடி அருகே வனப்பகுதி குட்டையில் தண்ணீர் குடித்த 33 ஆடுகளும் 1 மாடும் பலியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி அடுத்துள்ள மாதகடப்பா மலைப் பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டில் காப்புக் காடு உள்ளது. நேற்று காலை இந்த குட்டைக்கு அருகில் 33 ஆடுகளும் 1 மாடும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

குட்டையில் விஷம் கலந்த தண்ணீரை குடித்து அவை இறந்திருக்கலாம் என்றும் கள்ளச் சாராய வியாபாரிகள் விஷசாராயத்தை குட்டையில் கலந்திருக்கலாம் என்றும் தகவல் பரவியது.

இதையடுத்து, வாணியம்பாடி வட்டாட்சியர் செந்தில், கலால் பிரிவு காவல் துறையினர், தாலுகா காவல் நிலைய போலீஸார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குளத்தில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்று தண்ணீரின் மாதிரிகள் சேகரிக்கப் பட்டன. இதுதொடர்பாக, வாணி யம்பாடி வட்டாட்சியர் செந்தில் கூறும்போது, ‘‘மாதகடப்பா பகுதி யைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்த மான இந்த கால்நடைகள் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது. கால் நடை மருத்துவர்களின் பிரேதப் பரிசோதனையின் முடிவில் ஆடுகள், மாடு இறந்ததற்கான காரணம் தெரியவரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x