Published : 10 Apr 2015 09:32 AM
Last Updated : 10 Apr 2015 09:32 AM
ஏப்ரல் 16-ம் தேதி தமிழகத்தில் 42 இடங்களில் 42 மத்திய அமைச்சர் களை வரவழைத்து தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாட பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.
கடந்த டிசம்பர் 20-ம் தேதி சென்னையை அடுத்த வண்டலூ ரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தாவிட்டால் மத்தியில் ஆட்சியை தக்க வைக்க முடியாது. எனவே, அதற்காக இரவு, பகல் பாராது உழைக்க தயாராக இருக்க வேண்டும் என தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த மார்ச் 5-ம் தேதி கோவையில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போதும் அவர் இதனை வலியுறுத்தினார்.
கடந்த ஏப்ரல் 2 முதல் 4-ம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
தலித்களுக்கு முக்கியத்துவம்
வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் மக்கள் சந்திப்பு இயக் கத்தை நடத்துவது, அதிக எண்ணிக் கையில் முழுநேர ஊழியர்களை நியமிப்பது, மத்திய அமைச்சர் களை பொறுப்பாளர்களாக நியமிப் பது, தலித்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவினரை கவரும் வகை யில் நிகழ்ச்சிகளை நடத்து வது உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் அப்போது முன்வைக் கப்பட்டன.
அதனை செயல்படுத்தும் வகை யில் ஏப்ரல் 16-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் சிறப் பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட 42 மாவட்டங்களிலும் 42 மத்திய அமைச்சர்களை இந்த விழாக்களுக்கு அழைத்து வர பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.
முக்கிய வேலைகள் இல்லாத மத்திய அமைச்சர்கள் 16-ம் தேதி தமிழகம் செல்லுமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருப்பதாக பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கான பொறுப்பு மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஸ் கோயலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் மத்திய அமைச்சர்களிடம் பேசி வருவதாகவும் ஓரிரு நாளில் தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT