Last Updated : 17 Apr, 2015 09:10 AM

 

Published : 17 Apr 2015 09:10 AM
Last Updated : 17 Apr 2015 09:10 AM

குறைந்து வரும் ஏரிகளின் நீர்மட்டம்: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வருமா?

கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதி கரித்து வருகிறது. அதேநேரத்தில் சென்னையைச் சுற்றியுள்ள மற்ற ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

பூண்டி ஏரி கடந்த வாரம் கிட்டத்தட்ட வறண்ட நிலையில் இருந்தது. ஏரியில் 0.061 டி.எம்.சி நீர் மட்டுமே அதில் இருந்தது. தற்போது கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீரின் அளவு 0.146 டி.எம்.சியாக அதிகரித்துள் ளது. பூண்டி ஏரியிலிருந்து சென் னையின் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 24 கன அடியாக உள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணா நீரை இதே வேகத்தில் திறந்துவிட வலியு றுத்தி, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா விரைந் துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “இதே வேகத்தில் மேலும் 10 அல்லது 15 நாட்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்தால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் கணிசமாக உயரும். அதை வைத்து கோடைக் காலத்தை கண்டிப்பாக சமாளித்து விடலாம்” என்றனர்.

பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தபோதிலும் சென்னைக்கு நீர் வழங்கி வரும் மற்ற ஏரிகளின் நீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. கடந்த 9-ம் தேதி சோழவரத்தில் 0.057 டி.எம்.சி, செங்குன்றத்தில் 1.4 டி.எம்.சி, செம்பரம்பாக்கத்தில் 0.81 டி.எம்.சி நீர் இருந்தது. ஆனால், 16-ம் தேதி சோழவரத்தில் 0.04 டி.எம்.சி, செங்குன்றத்தில் 1.3 டி.எம்.சி, செம்பரம்பாக்கத்தில் 0.76 டி.எம்.சி நீர் உள்ளது.

ஏரிகளின் நீர் இருப்பு கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதால், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிப்பது பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் சவாலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x