Published : 03 Apr 2015 10:23 AM
Last Updated : 03 Apr 2015 10:23 AM
கைப்பேசி எண்ணைகூட தமிழில் சொல்வதற்கு தமிழர்கள் தயங்குவது வேதனைக்குரியது என்றார் பாஜக மக்களவை உறுப்பினர் தருண் விஜய்.
அவர் நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசுபவர்கள், தங்களது குடும்பத்தினரிடமும், மற்ற இடங்களிலும் வேறு மொழிகளில் தான் பேசுகின்றனர். ஆனால், இந்தி மொழியைப் படிக்க வேண்டும் என்று தமிழர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர்.
தமிழ் மொழி மிகவும் பழமையானது. கண்டிப்பாக அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அதேசமயம், தமிழ் மொழி பேசுவோர், கைப்பேசி எண்ணைகூட தமிழில் சொல்வதற்குத் தயங்குவது வேதனைக்குரியது.
திருக்குறளை அனைவரும் கற்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களாக பிரச்சாரம் மேற்கொண்டேன். இதனால் 1 லட்சம் மாணவர்கள் திருக்குறள் மற்றும் வள்ளுவர் குறித்து படித்துவருகின்றனர். இந்த எண்ணிக்கை 10 லட்சமாக உயரும். ஒவ்வொருவருக்கும் ஒரு கலாச்சார அடையாளம் இருக்கும். எனவே, அதற்குள் பிரிவினையை ஏற்படுத்தி மோதல் போக்கை உருவாக்குவது அவசியமற்றது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT