Published : 04 Apr 2015 09:51 AM
Last Updated : 04 Apr 2015 09:51 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராஜகோபால சுவாமி கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் எடுப்பது தொடர்பாக கடந்த மாதம் 31-ம் தேதி வக்கீல்கள் செல்வராஜ் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் இருசக்கர வாகனம் மூலம் திருச்சிக்கு சென்றனர். துவாக்குடி அருகே அவர்களை வழிமறித்த, போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னையில் டிஜிபியிடம் புகார் அளிக்க வக்கீல் செல்வராஜ் உட்பட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று வந்தனர். டிஜிபியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், வக்கீல்கள் அனைவரும் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT