Published : 27 Apr 2015 02:19 PM
Last Updated : 27 Apr 2015 02:19 PM

தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி கடிதம்

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தையும், மோட்டாங்குறிச்சி கிராமத்தை தத்து எடுக்கும் நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து விட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், இத்தகைய போக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x