Published : 23 Apr 2015 09:01 AM
Last Updated : 23 Apr 2015 09:01 AM

வேளாண் கடனுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தக் கூடாது: வைகோ வலியுறுத்தல்

வேளாண் கடன் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு வழங்கி வரும் வேளாண் கடனுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி விவசாயக் கடன் தொகைக்கு 9 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. இதில் 2 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கி விடும். எனவே விவசாயிகளிட மிருந்து 7 சதவீதம் வட்டி வசூலிக் கப்படுகிறது. அதிலும், கடன் களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால் மேலும் 3 சதவீதம் மானியம் அளிக்கப்படும். தற்போது ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வேளாண் கடன் வட்டிக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதால் 11 சதவீத வட்டியையும் விவசாயிகளி டம் வசூலிக்க வேண்டும்” என்று வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் நகைக் கடன்களுக்கு பதிலாக விவசாய சாகுபடி நிலங்களுக்கான சிட்டா அடங்கல் தாக்கல் செய்வதை வைத்து கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் விவசாயிகளின் கடன் சுமையை மேலும் அதிகரித்து, தற்கொலை செய்யத் தூண்டுகிற வகையில் அமைந்துள்ளன. எனவே இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், வாழை, வெற்றிலை மற்றும் முருங்கை ஆகிய பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x