Published : 06 Apr 2015 09:58 AM
Last Updated : 06 Apr 2015 09:58 AM

முன்னாள் அமைச்சர் கைது கண் துடைப்பு நடவடிக்கை: ராமதாஸ் சந்தேகம்

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது கண் துடைப்பு நடவடிக்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக் குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கை ஆகும். முத்துக்குமாரசாமியின் தற் கொலைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி காரணமில்லை என்று மறுக்கும்படி அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கள் கொடுக்கப்பட்டன. இந்த முயற்சி கள் தோல்வியடைந்து விட்டதாலும், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிர மடைந்ததாலும்தான் தாங்கள் வழக்கை நியாயமாக நடத்துவதாகக் காட்டும் நோக்குடன் முன்னாள் அமைச்சரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சிபிஐயால் மட்டுமே முடியும். அதனால் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x