Published : 09 Apr 2015 10:18 AM
Last Updated : 09 Apr 2015 10:18 AM

எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை முடிவடைகிறது

பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மார்ச் 19-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. கடைசி நாளன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் கலந்துகொண்டுள்ளனர். விடைத் தாள் திருத்தும் பணி 20-ம் தேதிக்குப் பிறகு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x