Published : 19 Apr 2015 12:52 PM
Last Updated : 19 Apr 2015 12:52 PM
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஜேசுராஜா. இவரது மனைவி ஜெயம்மேரி. இவர்களது மகன் செல்வ பிரின்ஸ் (11).
உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெயம்மேரி, செல்வபிரின்ஸ் ஆகியோர் கடந்த 22.1.2013 அன்று சென்னையில் இருந்து ஆம்னி பஸ்ஸில் மதுரை வந்தனர்.
ஒத்தக்கடை அருகே வளைவில் பஸ் திரும்பும்போது, பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதியது. இதில் செல்வபிரின்ஸின் இடதுகை முழுவதும் துண்டிக்கப்பட்டது. ஜெயம்மேரி லேசான காயத்துடன் தப்பினார்.
இந்நிலையில், வாகன விபத்து இழப்பீடு கோரி மதுரை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜெயம்மேரி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி வெங்கடவரதன், விபத்தில் கையை இழந்த செல்வபிரின்ஸுக்கு ரூ.13.16 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT