Published : 17 Mar 2015 09:54 AM
Last Updated : 17 Mar 2015 09:54 AM
தொலைதூரக்கல்வி திட்டத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தடை விதித்துள் ளது.
இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தொலைதூரக்கல்வி மூலமாக வழங்கப்படும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகரிப்பதில்லை. இதில், கட்டிடக்கலை, நகரமைப்பு, பார்மசி, ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளும் அடங்கும்.
தற்போது தொலைதூரக்கல்வி கவுன்சில் (டெக்) அமைப்பின் பணிகள் யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், தொலைதூர கல்வித் திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகளை ஒழுங்குபடுத்த யுஜிசி முடிவுசெய்துள்ளது.
அதன்படி, எந்தவொரு பல்கலைக்கழகமோ, நிகர்நிலைப் பல்கலைக்கழகமோ அல்லது கல்வி நிறுவனமோ எம்பிஏ, எம்சிஏ படிப்புகளைத் தவிர, பொறியியல் தொழில்நுட்ப பாடங்கள் தொடர்பான பட்டப் படிப்பையோ, பட்டயப் படிப்பையோ தொலை தூரக்கல்வி திட்டத்தில் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங் கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது யுஜிசி அல்லது ஏஐசிடிஇ கடும் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT